Sunday, 19 April 2015

கவிதைகள்
தமிழ் பொம்மைகள்
எப்படியும் கையாளலாம்
தூக்கிப் போடலாம்
சிறையில் அடைக்கலாம்
நடுத்தெருவில் கொளுத்தலாம்!
 
ஆனால்,
பொம்மைகள் எப்பொழுதும்
எவன் காலையும்
நக்கி வாழ்வதில்லை
 

தலையாட்டும்
தஞ்சாவூர்ப் பொம்மைகள்
எப்பொழுதும் ஆடுவதில்லை!
 
பாவைக்கூத்துப் பொம்மைகளின்
அசைவு
ஆட்டுபவனின் திறமையில்
 
இருக்கிறது!
 
தமிழன் பொம்மைகள்
எவன் கையிலும் ஆடும்
தன் முன் அழியும்
தனது இனம் கண்டு
பொம்மைகளால்
எதுவும் செய்துவிட முடியாது
 

ஆட்டுங்கடா ! ஆட்டுங்கடா !
இந்தத் தமிழ்ப் பொம்மைகளை
எவன் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்!                               -சை.பீர்முகம்மது





விமர்சனம்
சை.பீர்முகம்மது இக்கவிதையில் தமிழர்கள் பிறர் பேச்சை கேட்டு அப்படியே பொம்மையாக செயல்படுவதை சித்திருக்கிறார். இனப்பற்றும்மொழிப்பற்றும்இல்லாததமிழன்போகிறஇடமெல்லாம்சுலபமாகஏமாற்றப்படுகிறான். இன்றுள்ள தமிழன் எதையும் சாதிப்பதுமில்லை தட்டிக் கேட்பதுமில்லை.


வாக்குமூலம்
என்னைவேடிக்கைபார்க்க
உள்ளேவருகிறீர்கள்

நான்சரிந்துகிடக்கும்அறையின்
சிமெண்டுத்தரையின்குளிர்வதை
என்னைஎழுப்புகிறது

உடலெங்கும்எரியும்ரணங்கள்வழி
கசிந்துவெளியேறுகிறதுஎன்உயிர்

சொல்லமுடியாதஇடங்களிலும்
என்னைப்பிடித்துத்தின்கிறதுவலி

காலணிமிதித்தஇடங்களில்
கன்றிப்போயிருக்கும்தோல்

என்மேல்விளையாடியகட்டைகளால்
தாறுமாறாய்முதுகிலும்மார்பிலும்
கோடுகள்

சிமெண்டுத்தரையிலும்சுவரிலும்
சிந்திக்கிடக்கும்இரத்தத்துளிகள்

காக்கும்இந்நிலையம்காரணப்பெயர்
என்றுநம்பியிருந்தேன்
இதுஇடுகுறிப்பெயரென்பது
இப்பொழுதுபுரிந்தது


திடீரென்றுஅந்நியகுரல்கள்
அறையைஆக்கிரமிக்கின்றன
ஐந்தாவதுசுற்றுக்கானவிசாரணை
தொடங்கிவிட்டது

நீங்கள்போய்விடுங்கள்
என்மேல்விழும்ஒவ்வோர்
அடிஉதையும்விழுகிறது
உங்கள்அறியாமையிலும்                                -நா.பச்சைபாலன்

விமர்சனம்
சிறைச்சாலையில் இருக்கும் ஒரு கைதியின் நிலையை இக்கவிதை விளக்குகிறது. அக்கைதி படும் துன்பத்தையும் கஷ்டத்தையும் நா. பச்சைபாலன் தெளிவாக எழுதியுள்ளார். காவல் நிலையம் பாதுகாப்பைத் தரும் என்று அவன் நினைத்தது பிழை என்று உணர்கிறான். விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அவனை காலணியால் மிதித்து, கட்டையால் அடித்து, உதைத்து மிகவும் துன்புடுத்துகிறார்கள். அவன் சொல்ல முடியாத வலிக்குட்படுகிறான்.

இயற்கை....செயற்கை.....
இயற்கையில் சமைத்தது
இன்பங்களே!
இயல்பு மாறிடின்
துன்பங்களே!
இயற்கையில் தன்மைகள்
இதமான வாழ்க்கைக்கு!
செயற்கையில் சேர்ந்தவை
சோகங்கள் சுமப்பதற்கு!
இறைவன் படைக்கையில்
இருந்தவை இன்பங்களே!
மனிதன் படைத்தவையே
மாளாத துன்பம் தருபவை!
சுனாமியும்,பூகம்பமும் தரும்
சோகங்கள் மறந்திடலாம்!
செயற்கையின்  உச்சத்தில்
செயல்பட்ட நிகழ்வுகள்
சோகங்கள் சீக்கிரத்தில் மறப்பதில்லை!
இயற்கையில் எல்லாம் அடங்கும்!
செயற்கை எல்லாம் முடங்(க்)கிடும்!                             -பூங்குழலி வீரன்

விமர்சனம்
இக்கவிதையில் கவிஞர் இயற்கை மற்றும் செயற்கை பற்றி எழுதியுள்ளார். கடவுள் நமக்கு தந்த இயற்கை என்றும் நமக்கு சுகத்தையும்மனிதனால் உருவாக்கப்படுகிற செயற்கை வடிவங்கள் சுமைகளை தான் தரும் என்று கவிஞர் கூறுகிறார். மேலும் இயற்கையினால் ஏற்படும் சேதாரம் காலம் சென்றபின் மறைத்துவிடும் ஆனால் செயற்கையினால்ஏற்படும் சேதாரமோபயங்கரமானதகவும் சீக்கிரத்தில் மறக்கமுடியாதவையாகவும் இருக்கும் என்கிறார் கவிஞர்.

காலமாகாத கவிதைகள்
எளிமையானதுஉன்கவிதை
ஆடம்பரஅணிவகுப்புகளைஇரசிக்க
இதயம்தவிப்பவர்களுக்கு
இடமில்லைஉன்னிடம்

சாலையோரமரங்களின்இலைகளில்
படிந்துகிடக்கும்மண்துகள்களாய்
உன்கவிதைகளில்உன்அனுபவங்கள்

உன்போக்கில்நீமுன்னால்பயணமானாய்
பின்னால்வரும்வாசகர்களின்
உணர்வுக்காகபயணத்தைத்தாமதித்ததில்லை

கட்டுமானப்பகுதியில்
ஒவ்வொருசெங்கல்லாய்அடுக்கும்இடத்தை
நீகடந்திருப்பாய்யினும்
உன்கவிதையில்அதன்பாதிப்புஇராது

நீவித்தையேதும்கற்றவனில்லை
ஆயினும்வேகமாகஓடும்
எந்தவாசகனும்உன்கவிதைகடக்கையில்
வேகம்குறைக்கிறான்

நீவீண்செலவுகளைவிரும்பிச்செய்பவனல்லன்
உன்கவிதையில்
நீஎண்ணியெண்ணிச்செலவுசெய்வதை
விருந்துக்குவந்தவர்களுக்குஉணர்த்துகிறாய்

உரத்தக்குரல்களில்கத்தல்களையும்
போலிப்பிரசாரங்களையும்நீவெறுத்தவன்
உன்கவிதையில்நீதனியனாய்மேடையில்
ஒலிபெருக்கியோடுஒதுங்கியதில்லை
எளியமக்களின்இன்னல்களை
இதயத்தில்ஏந்தியவன்நீ
அவர்களின்காயாதகண்ணீர்ச்சுவடுகளை
உன்கவிதையில்வரைந்துகொண்டேஇருந்தாய்

அமைதியானதுஉன்கவிதை
ஊரடங்கியவேளையில்
புறம்போக்குநிலத்துக்குடிசையில்நிகழ்ந்த
உன்மரணத்தைப்போல                                        -நா.பச்சைபாலன்

விமர்சனம்
இக்கவிதையில் கவிஞர், வேறொரு காலம் தவறிய கவிஞரையும் அவரது படைப்பையும் குறித்து எழுதியுள்ளார். அவர் தவறினாலும் அவர் எழுதிய படைப்புகள் என்றும் மறையாது என்கிறார் நா. பச்சைபாலன். காலம் தவறிய கவிஞரின் எழுத்துத் தன்மையை இவர் சித்திரித்துள்ளார்.


வீண்பேச்சுப்
கடைபேசி திரிகின்றீர் காலம் நேரம்
கருதாமல் வாழ்நாளைக் கழிக்கின் றீரே!
எதையெடையோ பேசுகின்றீர் எனினும் என்ன?
இருக்கின்ற நிலைமாற்ற நினைத்த துண்டோ?

தெருத்தோறும் தொகைத்தொகையாய்க் கூடு கின்றீர்
திரைநடிகர் தம்சிறப்பைப் பேசு கின்றீர்
உருப்படியாய் உலகநலம் உயர்வு பற்றி
உளமார எண்ணியதும் உண்டோ சொல்வீர்?

கொலைகொள்ளை பர்றியதே எங்கும் பேச்சு
கொள்கையைப் மர்றியதாய்க் காணேன் அந்தோ
கலைபற்றிப் பேசுவோரும் காணேன் இந்தக்
கவினுலகம் நிலையற்ற தென்கின் றீரே!

பல்லிவிழும் பலன்பற்றி பேசு கின்றீர்;
பதறிப்போய்ப் பஞ்சாங்கம் தேடு கின்றீர்!
சொல்லிவைத்தாற் போல்நாளும் கூடு கின்றீர்!
சூதாட்டக் கலங்காணச் செல்லு கின்றீர்!

வீண்பேச்சு விட்டிங்கு விளைவு பற்றி
விரிவாக நாம் ஆற்ற வேண்டும் தொண்டு;
கூன்பேச்சுக் குடிப்பெருமை தனைகெ டுக்கும்
கொடுநஞ்சு என்பேன்நான் குறித்துக் கொள்வீர்!
சமுதாய நிலையெண்ணிப் பாரிர்! நும்மைச்
சாக்காட்டுக் குப்பின்னும் பாரி லுள்ளோர்
அமைவாக நினைத்திடவே வேண்டும் என்னில்
ஆயிரந்தொண் டாற்றிடவும் வேண்டும் நன்றே!                  -பொன்முடி

விமர்சனம்

கவிஞர் பொன்முடி மக்கள் பேசக்கூடிய எல்லா வீண்பேச்சுகளையும் இக்கவிதையில் வெளிப்படுத்துகிறார். மக்கள் வீணாக பேசாமல் நல்ல விஷயங்களை பேசுதல் சமுதாயத்திற்கு நிச்சயமாக பயனழிக்கும்.நாம் பேசும் ஒவ்வொன்றும் பயன் தருமா இல்லையா என்பதை பற்றி சிந்தித்து பேசுதல் அவசியம்.

No comments:

Post a Comment